Friday, July 16, 2010

கனவுகள்

கனவுகள் உருப்பெறத்
தொடங்கியிருந்தன.

மிகப் பெரும் மலையை
நகர்த்திப் போட்ட பின்
மிக ஆசுவாசமாக
நடந்து கொண்டிருந்தோம் நாம்.

உள்ளங்கையில் ஒட்டியிருந்த
வண்ணங்கள் வெளிறிப் போன
பட்டாம் பூச்சிகள் ஒவ்வொன்றாய்
பறக்கத் தொடங்கின.

எஞ்சியிருந்த பட்டாம்பூச்சிகளை
விரல் விட்டு
எண்ணிக்கொண்டிருந்தோம் நாம்.

கடைசியில் ...
எனது குழந்தை
எரிந்து போனது.

2 comments:

  1. //கடைசியில் ...
    எனது குழந்தை
    எரிந்து போனது.//

    நல்ல கற்பனை . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //கடைசியில் ...
    எனது குழந்தை
    எரிந்து போனது.//

    நல்ல கற்பனை . வாழ்த்துக்கள்

    ///////////
    வரட்சியான வாழ்த்து

    ReplyDelete